விருத்தாசலம் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2015 10:05
விருத்தாசலம்: கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், நேற்று பகல் 12:00 மணிக்கு பால், தயிர், சந்தனம் போன்ற பொ ருட்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக் கவசத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மாலை 6:00 மணிக்கு கொளஞ்சியப்பர் உற்சவர் வெள்ளித் தேரில் உட்பிரகார உலா நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி, கருவேப்பிலங்குறிச்சி சாலை வேடப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.