விருதுநகர் : மதுரையிலிருந்து ஆன்மிக சுற்றுலா ஸ்தலங்களை இணைத்து சங்கரன்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு ரயில்கள் இயக்க வேண்டும். மதுரையிலிருந்து ஆன்மிக சுற்றுல ஸ்தலங்களான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், தாணிப்பாறை சதுரகிரி மலை கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், நான்குநேரி வானமாமலை கோயில் , நாகர்கோவில் நாகராஜர் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் ஆகியவற்றிற்கு பக்தர்கள் சென்று வர வசதியாக ரயில்கள் இயக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ,சதுரகிரி மலைக்கோயில்களுக்கு சென்னை, கடலூர் உட்படமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் மதுரை வரை ரயில்களில் வந்து அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வதற்கு பெரும்பாலும் பஸ் பிடிக்க வேண்டியது உள்ளது. பக்தர்களின் தேவை கருதி ஆன்மிக சுற்றுலா ஸ்தலங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக மதுரை - கன்னியாகுமரி இடையே உள்ள முக்கிய ஆன்மிக ஸ்தலங்களை இணைக்கும் விதமாக ரயில் இயக்க வேண்டும்.