திருத்தணி திரவுபதியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2015 12:06
திருத்தணி: திரவுபதியம்மன் கோவில்களில் நேற்று நடந்த தீமிதி திரு விழாவில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். மேல்திருத்தணி மற்றும் தாழவேடு பகுதிகளில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த, 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. பின், கிராமம் மற்றும் நகர பெண்கள் திரளாக கோவில் வளாகத்திற்கு வந்து பொங்கலிட்டு வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.