திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் சுற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் அவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவன் முன்பு செய்த வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் சேர முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி. மதி என்றால் அறிவு.