பண்ருட்டி: திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் லட்சுமி நாராயணனாக அமர்ந்த நிலையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி, காலை 6: 30 மணிக்கு விஸ்வரூபம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, தொடர்ந்து உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, பின் நடை திறப்பு, நித்தியபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.