Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளம்கரை காத்த அய்யனார் கோயிலில் ... பனசங்கரி அம்மன் நகை கொள்ளை:தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூறாவளி காற்றுடன் கொட்டியது மழை திருவண்ணாமலை கோவில் தேர் கவசம் சேதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2015
12:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை
பெய்தது. இதில், அண்ணாமலையார் கோவிலில் மஹா ரதத்திற்கு, ரூ.10.50 லட்சம் மதிப்பில்
பொருத்தப்பட்ட ஃபைபர் கவசம் சேதமடைந்தது. திருவண்ணாமலையில், நேற்றிரவு, 7 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால், கிரிவலப்பாதையில் மரங்கள் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததில், மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த, மின் ஊழியர்கள் உடனடியாக வந்து மின் ஒயர்களை சீர் செய்தனர். இதனால், கிரிவலம் சென்ற பக்தர்களுக்கும், அப்பாதையில் சென்ற வாகனங்களுக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில், வீதி உலா
வரும், 63 அடி உயரமுள்ள மஹா ரதத்துக்கு, ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் மழை மற்றும்
வெயில் பாதிக்காமல் இருக்க, கடந்த பிப்ரவரி மாதம் ஃபைபர் கவசம் பொருத்தப்பட்டது.
நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால், தேரின் கிழக்கு பக்கமாக பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகரம் பலத்த காற்றினால், 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தெற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட இரும்பு தகரம் அப்பளம் போல் நொறுங்கி தேரோடு தேர் ஒட்டியவாறு சேதமடைந்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்களின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால், நகர் முழுவதும் மின்நிறுத்தம் செய்யப்பட்டு, மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், திருவண்ணாமலை நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar