Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளம்கரை காத்த அய்யனார் கோயிலில் ... பனசங்கரி அம்மன் நகை கொள்ளை:தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூறாவளி காற்றுடன் கொட்டியது மழை திருவண்ணாமலை கோவில் தேர் கவசம் சேதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2015
12:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை
பெய்தது. இதில், அண்ணாமலையார் கோவிலில் மஹா ரதத்திற்கு, ரூ.10.50 லட்சம் மதிப்பில்
பொருத்தப்பட்ட ஃபைபர் கவசம் சேதமடைந்தது. திருவண்ணாமலையில், நேற்றிரவு, 7 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால், கிரிவலப்பாதையில் மரங்கள் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததில், மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த, மின் ஊழியர்கள் உடனடியாக வந்து மின் ஒயர்களை சீர் செய்தனர். இதனால், கிரிவலம் சென்ற பக்தர்களுக்கும், அப்பாதையில் சென்ற வாகனங்களுக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில், வீதி உலா
வரும், 63 அடி உயரமுள்ள மஹா ரதத்துக்கு, ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் மழை மற்றும்
வெயில் பாதிக்காமல் இருக்க, கடந்த பிப்ரவரி மாதம் ஃபைபர் கவசம் பொருத்தப்பட்டது.
நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றினால், தேரின் கிழக்கு பக்கமாக பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகரம் பலத்த காற்றினால், 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தெற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட இரும்பு தகரம் அப்பளம் போல் நொறுங்கி தேரோடு தேர் ஒட்டியவாறு சேதமடைந்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்களின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால், நகர் முழுவதும் மின்நிறுத்தம் செய்யப்பட்டு, மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், திருவண்ணாமலை நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar