பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
10:06
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி நடராஜருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. அக்கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, பிற்பகல், 3:00 மணிக்கு கலசம் வைத்து வேள்வி பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு நடராஜர் சிலைக்கு பால், பன்னீர், தேன், தயிர், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் சிறப்பு அபிேஷகமும், வேள்வியில் வைக்கப்பட்ட கலச நீரை ஊற்றி, சிறப்பு அலங்காரமும் செய்தனர்.முன்னதாக, மூலவர் சிவலோகநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நடராஜரை வழிபட்டனர். பின், நடராஜர் சப்பரத்தில் எழுதருளி கோவிலை வலம் வந்து, ஆதிபட்டி விநாயகர் கோவில் வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.