திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில், குருமார்கள் விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலின், அறவுரை மண்டபத்தில் பாம்பன்சாமிகள் அறநெறி அறக்கட்டளை சார்பில் குருமார்கள் விழா நடந்தது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி தலைவர் சரவணக்குமார், பேரூராட்சி தலைவர் வெற்றிவேலன், ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.சக்திசுப்ரமணியன், சிவஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகள், குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், பாம்பன் சுவாமிகளின் மாத இதழ் ஆசிரியர் கலைச்செல்வன் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். முன்னதாக காலை 9:00 மணிக்கு மெய்கண்டாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தன. ஜானகிராமன் நன்றி கூறினார்.