திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸசவ விழா: பல்லக்கில் எழுந்தருளி உலா வந்த ராமபிரான்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2026 02:04
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான இன்று காலை பல்லக்கில் உற்ஸவர் ராமபிரான் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரோத்ஸவ திருப்புல்லாணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு நாளும் காலை வேளையில் பல்லக்கிலும், இரவில் சிம்மம், அனுமார், கருட சேவை, புன்னை வாகனம், சேஷச, ஹம்ச, குதிரை வாகனம் உள்ளிட்டவைகளுடன் உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நான்கு ரத வீதிகளிலும் நடக்கிறது. இரண்டாம் நாளான இன்று காலை பல்லக்கில் உற்ஸவர் ராமபிரான் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மே 1., அன்று காலை 9:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.