Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறைவனுக்கு திருக்கல்யாணம் ஏன்? வேதங்கள் பூஜை செய்த தலங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஞானசம்பந்தர் தங்கிய மடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2011
05:07

பாண்டிய நாட்டில் மன்னன் கூன்பாண்டியன் சமணசமயத்தை தழுவினான். மன்னனை பின்பற்றி மக்களும் சமணத்தையே பின்பற்றினர். கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சிவபக்தர்களாக திகழ்ந்தனர். மங்கையர்க்கரசியார், ஞானசம்பந்தர் மீது அன்பு கொண்டவராய், அவரை பாண்டிய நாட்டுக்கு அழைத்தார். வேதாரண்யத்திலிருந்து ஞானசம்பந்தர் மதுரை வந்தார். ஞானசம்பந்தர் சொக்கநாதர் மீது ஆலவாய்பதிகம் பாடினார். பின் ஒரு மடத்தில் தங்கினார். இதையறிந்த சமணர்கள் மடத்திற்கு தீ வைத்தனர். சமணர்கள் வைத்த தீ கூன்பாண்டியனை வெப்புநோயாக பற்றியது. மங்கையர்க்கரசியாரின் வேண்டுகோளின் படி மந்திரமாவது நீறு பதிகம்பாடி வெப்புநோயை போக்கினார். இதன் பின்னர் சமணர்கள் தீயிலும் நீரிலும் வாதம் செய்து வெற்றி பெற விரும்பினர். இந்த அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் ஞானசம்பந்தரே வெற்றி பெற்றார். அப்போது ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் வேந்தனும் ஓங்குக என்றதனால் பாண்டியனுடைய கூனும் நிமிர்ந்தது. கூன் இருந்ததால் கூன் பாண்டியன் என்றும், கூன் நிமிர்ந்ததால் நின்ற சீர் நெடுமாறன் என்றும் மன்னனுக்கு பெயர் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் மன்னன் சைவ சமயத்தை பின்பற்றினான். மக்களும் சைவத்தை தழுவினர். பாண்டியநாட்டில் சைவநெறி மீண்டும் தழைத்தது. மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும், நின்ற சீர் நெடுமாறனும் 63 நாயன்மார்கள் வரிசையில் இடம் பெறும் பேறு பெற்றனர். திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கிய மடம் திருஞானசம்பந்தர் ஆதீனத் திருமடமாக தெற்கு ஆவணிமூலவீதியில் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar