பதிவு செய்த நாள்
10
ஆக
2015
11:08
கடம்பத்துார்:ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, கடம்பத்துாரில் உள்ள கடம்பவன முருகன் கோவிலில், பாலாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் அடுத்த ஸ்ரீதேவிக்குப்பத்தில் உள்ளது, கடம்பவன முருகன் கோவில். இந்த கோவிலில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை 10:30 மணிக்கு, சூரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு, கடம்பவன முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதன்பின், மதியம் 12:00 மணிக்கு, விசேஷ மலர் அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. அதன்பின், மாலை 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத கடம்பவன முருகனுக்கு திருக்கல்யாணமும், இரவு மலர் அலங்காரத்தில் வீதிஉலாவும் நடந்தது. இதில், கடம்பத்துார், வெண்மனம்புதுார், ஏகாட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.