Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லிங்கவாடி முத்தாலம்மன் கோயில் ... ராமாயணம், மகாபாரதம் கேட்டால் சகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கு புதிய தேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2015
12:09

அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், புதிதாக விநாயகருக்கு, 10 லட்சம் ரூபாயில் தேர் செய்யப்பட்டுள்ளது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. இங்கு சிவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு கடந்த, 2000ம் ஆண்டில் புதிய தேர் செய்யப்பட்டு, 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. தேருக்கு முன் செல்லும் விநாயகர், சப்பரத்தில் வைத்து அழைத்து செல்லப்படுகிறார். இதையடுத்து, விநாயகருக்கு என புதிய தேர் செய்யும் பணி ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது.

தேருக்கு தலா நான்கு அடி விட்டமுள்ள, நான்கு இரும்பு சக்கரங்களும், இரண்டு இரும்பு அச்சுக்களும் இடிகரையில் செய்யப்பட்டன. தேர், 7.75 அடி உயரமும், 7.75 அடி அகலமும் உடையதாக, வாகை மற்றும் இலுப்ப மரத்தில் செய்யப்படுகிறது. சக்கரமும், அச்சும் 1.50 டன் எடை கொண்டதாக உள்ளன. தேர், 4.50 டன் எடையுள்ளதாக செய்யப்படுகிறது. தேரின் மேல்பகுதி அலங்காரத்திற்கு பின் தேர், 21 அடி உயரம் கொண்டதாக இருக்கும். தேரின் முன்பகுதியில் இருகுதிரைகளும், பிரம்மாவும் அமைக்கப்பட்டுள்ளன. தேரின் வெளிப்பகுதியில், விநாயகர், சிவன், சரஸ்வதி, பார்வதி உள்ளிட்ட வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சேலம், தம்மம்பட்டி, சிற்பி சக்திவேலன் தலைமையில் தேர் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். பணி முடியும் நிலையில் உள்ளது. தேர் வெள்ளோட்டம் வரும், 17ம் தேதி காலை 11:00 மணிக்கு துவங்கி, தேரோடும் வீதியில் நடக்கிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை திருமுருகன் அருள்நெறிக் கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar