Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாரகேஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 ... வேணுகோபால சுவாமி கோவிலில் 25ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி சிவன், பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் அக்., 26 ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2015
11:10

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் 3 கோடி ரூபாய் செலவில் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் அக்., 26 ல் துவக்கப்படுகிறது. தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் சிவன் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் உள்ளன. இந்த கோயில்கள் 1985, மற்றும் 2003 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பணி உபயதாரர் கமிட்டி தலைவர் ராஜா சங்கரலிங்கம் தெரிவித்தாவது: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும், என்பதை கருத்தில் கொண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிவன் கோயிலில் கோபுரங்கள், விமானங்கள், பிரகார தளங்கள், மடப்பள்ளி,மண்டபம், வாகனங்கள் சீரமைக்கப்படுகின்றன. கர்ப்பகிரக வாயில் வெள்ளியால் செய்யப்படவுள்ளது. பெருமாள் கோயிலில் புதியதாக லட்சுமி நரசிம்மர் சன்னிதி அமைக்கப்படுகிறது. ஆண்டாள் சன்னிதி இட மாற்றம் செய்யப்படவுள்ளதுஸ்ரீதேவி, பூதேவி,ராஜகோபுரம் சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளது. அக்.26 ல் காலையில் சிவன் கோயில் திருப்பணி துவக்க விழாவில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், சிந்தலக்கரை ராமமூர்த்தி சுவாமிகள் பங்கேற்கின்றனர். பெருமாள் கோயிலில், ஆழ்வார் திருநகரி ஜீயர், மற்றும் கோபால வல்லி தாசர் பங்கேற்கின்றனர். புனரமைப்பு பணிகள் ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளுக்கு 3 கோடி ரூபாய் திரட்டப்படவுள்ளது. திருப்பணிக்குழுவில் முக்கிய பிரமுகர்கள் 28 பேர் இடம் பெற்றுள்ளனர், என அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar