Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா கோலாகலம்! மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேர் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2015
05:10

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்தது.  திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் பிரசித்து பெற்றது. ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

Default Image
Next News

கடந்த, 2010ம் ஆண்டு ஜூலை மாதம்,16ம் தேதி  ஆழித்தேரோட்டம் நடந்தது. அதன்பின்,அதே ஆண்டு அக்டோபர் மாதம், தியாகராஜசுவாமி கோவில் திருப்பணி முகூர்த்தம் நடந்தது. திருப்பணி துவங்கியதை அடுத்து, 2011ம் ஆண்டு முதல், ஆழித்தேரோட்டம் நடைபெற வில்லை. தியாகராஜசுவாமி கோவில் திருப்பணியுடன்,2.18 கோடி ரூபாய் செலவில், ஆழித்தேர்,சுப்ரமணியர் தேர் புதுப்பிக்கும் பணியும் துவங்கின. பணிகள் முடிந்து, 2015,அக்.,26ல், ஆழித்தேர், சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி,ஆழித்தேர் வெள்ளோட்டத்தை ஒட்டி, 25ம்தேதி காலை,7:00 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,மஹா கணபதி ேஹாமம், வாஸ்துசாந்தி போன்ற பூஜைகள் நடைபெற்றன.நேற்று காலை,6:00 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, 9:15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை நடைபெற்றது.

காலை,9:30 மணியளவில்,சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் துவங்கியது.காலை,9:45 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆழித்தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேரின் பின்புற சக்கரங்கள் புல்டோசர் இயந்திரங்கள் மூலம் தள்ளப்பட்டன. ஆழித்தேர், கீழவீதி,தெற்குவீதி,மேலவீதி,வடக்குவீதி வழியாக வலம் வந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆழித்தேர் வெள்ளோட்டத்தால், திருவாரூர் நகரமே விழாக்கோலமாக காட்சி அளித்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.                   

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar