Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைகோயிலில் நீர் தும்பிகள் தீ ... படவேட்டம்மனுக்கு காய்கறி அலங்காரம்! படவேட்டம்மனுக்கு காய்கறி அலங்காரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

28 அக்
2015
10:10

மதுரை: மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா நேற்று (அக்.27) துவங்கியது. விழாவை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி தாமோதர தீப அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

வழக்கமான பூஜைகளான, துளசி பூஜை மற்றும் சந்தியாக் கால பூஜையைத் தொடர்ந்து தாமோதர தீப ஆரத்தி நடந்தது. அச்சமயம் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான தாமோதஷ்டக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பக்தர்கள், தங்கள் கரங்களால் நேரடியாக ஸ்ரீஸ்ரீராதா மதுராபதிக்கு நெய் தீப ஆரத்தி காட்டினர். இது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப தியானமும், நரசிம்ம பிரார்த்தனையும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில் விளக்கம் அளிக்கப்பட்டதாவது:

தாமோதரத் திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பகவானை நேரடியாக வழிபடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களது மன அமைதிக்கு பெரிதும் இது உதவி புரிகிறது. இதில் ஜபதியானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அடங்குவதால் பங்கேற்போர் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. இந்நிகழ்ச்சியானது இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்வாமி ஸ்ரீலபிரபுபாதாவின் வழிகாட்டிய படி உலகம் முழுவதும் <<உள்ள இஸ்கான் கோயில்களில் நடைபெறுகிறது. இம்மாதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி. ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்தால், மனஅமைதியும் மகிழ்ச்சியும் அடையலாம் என்று வேத சாஸ்திரங்கள் உறுதியளிக்கின்றன. விசேஷ திருநாட்களான நவம்பர் 1,8,10, 15, 22, 25 தேதிகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். தீபாவளி அன்றும், நவ. 25ம் தேதி பவுர்ணமி அன்றும் விசேஷ தீபத் திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar