Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமரபுயங்கரீஸ்வர் கோவிலில் ... சக்தி விநாயகர் கோவிலில் அன்னாபிஷேகம்! சக்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் அன்னாபிேஷக விழா
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் அன்னாபிேஷக விழா

பதிவு செய்த நாள்

28 அக்
2015
11:10

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, அன்னாபிேஷக விழா நடந்தது. விழாவையொட்டி, ருத்ரலிங்கேஸ்வரருக்கு, 16 வகை திரவிய அபிேஷகம், அன்ன அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. பொள்ளாச்சி கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷகம் மற்றும் அபிேஷக ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாலை 3:00 மணிக்கு அமணலிங்கேஸ்வரருக்கு பழங்கள், காய்கள், அன்னம் கொண்டு அபிேஷகம், மாலை 4:30 மணிக்கு அபிேஷகம், மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.

ஜோதி நகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மாலையில், சிவனுக்கு அன்னாபிேஷக அலங்காரம் நடந்தது. இதுபோன்று, பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், தேவம்பாடிவலசு அம்மணீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, அன்னாபிேஷகம் நடந்தது.

ஆனைமலை:ஆனைமலை ரமணமுதலி புதூரில் உள்ள மகுடீஸ்வரர் கோவில், பெத்தநாயக்கனூர் பட்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லூர் சித்தாண்டி ஈஸ்வரர் கோவில், ஆனைமலை சோமஸ்வரர் கோவிலில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. அதிகாலை முதலே மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், கனி அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சென்னை; 2026ம் ஆண்டின் முதல் நாளான இன்று வடபழநி முருகன் கோவிலில் அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar