Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » குரு தட்சிணாமூர்த்தி
திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2011
02:07

திருவாரூரில் தியாகராஜ ஸ்வாமி கோயில் பிரமாண்டத் தேரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் குரு தட்சிணமூர்த்தி ஸ்வாமியின் மடாலயம் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார். இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் கைவரப்பெற்று பல சித்து வேலைகளைப் புரிந்தார். தட்சிணாமூர்த்தி ஸ்வாமி வியாதிகளுடனும் விரக்தியடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் தனது இறுதிகாலத்தில் திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார். சித்தர்கள்ஜீவ சமாதியில் ஆழ்ந்தும்இவ்வையகத்தில் வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள் ..அவர்களின் உடல் எக்காலத்திலும் அழிவதில்லை என்பதற்கு ஆதாரமாக இந்த சமாதி பீடம் விளங்குகிறது.. இவரின் சமாதிஇன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது .மடாதிபதி மட்டும் சிறியபடியின் வழியேஉள்ளே இறங்கி பூசை செய்வார் .

குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் பூஜை சிறப்பானது.குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிநண்பகல் 12 மணிக்கு ஜீவசமாதி ஆனதால், அந்த வேளையில் நடக்கும் பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிற்று..

குரு தட்சிணாமூர்த்தி சாமிகளின் பிறப்பு :  திருச்சிக்கு அருகே உள்ள சிற்றுõர் கீழாலத்துõர். இங்கே சிவசிதம்பரம் பிள்ளை -மீனாம்பிகை தம்பதிகள்வசித்தனர். பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர் சிவசிதம்பரம் பிள்ளை. இந்தத் தம்பதிக்கு மக்கட்பேறு அமையவில்லை. எனவே பல தலங்களையும் தரிசித்து வந்தனர். ஒருமுறை இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். அங்கே மலையுருவாகத் திகழும் மகாதேவனை வழிபட்டு கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர். இரவுப் பொழுதில் அங்கேயே தங்கினர். அன்றிரவு இருவரின் கனவிலும் அண்ணாமலையார் தோன்றி நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறப்பேன்என்று அருளினார்.

அடுத்த நாள் காலை கோயில் சென்று ஆண்டவனுக்கு நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர். கனவு கண்டது போல் . மீனாம்பிகை அம்மையார் மணிவயிறு வாய்க்கப் பெற்றார். 10 மாதங்கள் கழித்து நல்ல ஆண் மகனை ஈன்றெடுத்தார். திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் அருணாசலம் என்றே சிசுவுக்கு நாமகரணம் சூட்டினர். இவர்தான் பின்னாளில்குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என அறியப்பட்டார். குழந்தைகளுக்கே உண்டான சில குணங்களையும் தாண்டி அருணாசலம் வளர்ந்தான். சில நேரங்களில் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரங்களில் மவுனம் அனுஷ்டித்து எதையோவெறித்துப் பார்த்தபடி இருப்பான். அருணாசலத்தின் நிலைமை குறித்துப் பெற்றோர் கவலைப்பட்டனர். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை . இந்த நிலையில் ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் காவி உடை உடலெங்கும் திருநீறு. கழுத்தை அலங்கரிக்கும் ருத்திராட்ச மாலைகள் அணிந்த துறவி ஒருவர் வந்தார் .. சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவனடியாரிடம் , தவம் இருந்து பெற்ற எங்கள் புதல்வன் அருணாசலம் பேசாமல் இருக்கிறான். ஏன் ஸ்வாமி ? என்று கேட்டார்.அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்டார் துறவி.

உடனே துறவியை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை அருணாசலத்தைக் காட்டினார். அப்போது அந்தப் பிள்ளை கண்களை மூடியபடி தியானத்தில் திளைத்திருந்தது. துறவியார் மெல்லப்புன்னகைத்தார். பிறகு சிவசிதம்பரம் பிள்ளையை நோக்கி இந்தப் பிள்ளை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்த செல்வம். இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அவதாரம் எடுத்திருக்கிறது. இப்போது உங்கள் புதல்வனுடன் பேசிப் பாருங்களேன் என்றார். சிவசிதம்பரம் பிள்ளையோ குரல் தழுதழுக்க குழந்தாய் அருணாசலம், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்காய்? பேசப்பா, உன் மழலை மொழியைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார். அவ்வளவுதான் 5 வருடங்களாகப் பேசாமல் இருந்த அந்த இறைவனின் அவதாரம் முதன்முதலாகப் பேசியது சும்மா இருக்கிறேன். சரிப்பா, சும்மா இருக்கிறாயா, நீ யார்? என்றார் துறவி. மூடிய கண்களைத் திறக்காமலேயே புன்னகையோடு “நீயேதான் நான், நானேதான் நீ ”என்று சுருக்கமாகப் பதில் சொன்னது குழந்தை. உனது பதில் சத்தியம் நான் புறப்படுகிறேன். என்ற துறவி விடைபெற்றார். பெற்றவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.

சாமிகள் தமது வாழ்நாளில்பல ஊர்களுக்கும் பயணித்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ... நீலப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி, முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதங்களை நிகழ்த்தினர். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாட்கள் இருந்தார். இறுதியாக திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்தார்.அங்கே சோமநாத ஸ்வாமி கோயில் அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றின் படுகையிலும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களின் அடியிலும் தங்கி இருந்த நாட்களைக் கழித்தார். பெரும்பாலான நேரத்தை தவம் இருப்பதில் செலவிட்டார். பசிக்கும்போது சாலையில் இறங்கி அங்கே உணவு யாசித்தார். எது கிடைத்ததோ அதை உண்டு வந்தார். சித்துõர் மாவட்டத்தில் வசித்து வந்த சோமநாத முதலியார் பெரும் செல்வந்தர். வயிறு சம்பந்தமான நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்காத வைத்தியர் இல்லை. சாப்பிடாத மூலிகை இல்லை என்றாலும் பலன் இல்லை. இறுதியாக யாரோ சிலர் சொன்னதன் பேரில் நடராஜ பெருமானைத் தரிசிக்க சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி கோயிலில் உள்ள மூர்த்திகளை வணங்கி உணவே எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்கத் தொடங்கினார்.2 நாட்கள் சென்றன. முதலியாருக்கு நடராஜ பெருமாளின் அருள் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் காலை வேளையில் ஒரு முடிவெடுத்தார். இன்றைக்குள் எனது நோய் குணமாகவில்லை என்றால் இரவில் நடராஜரின் சன்னிதி முன்னாலேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து. கூர்மையான கத்தி ஒன்றைத் தன் இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டார்.

இரவுவேளை நடராஜருக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர் பணி முடிந்ததும் சன்னிதியைப் பூட்டிவிட்டு வெளியேறினார். அப்போது துõண் மறைவில் இருந்த முதலியார் வெளியே வந்தார். தில்லைப் பெருமானே என் வேண்டுகோளுக்கு நீ இணங்கவில்லை. ஆகவே நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றபடி கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. சன்னிதியில் இருந்த ஓர் அசரீரி வாக்கு. அப்பனே உனது நோய் இங்கே குணமாகாது. திருவாரூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்தால் அந்தக் கணமே குணமாவாய் என்று ஒலித்தது.. மனம் மகிழ்ந்த முதலியார் மறுநாள் அதிகாலையே திருவாரூர் புறப்பட்டார். தியாகராஜ பெருமானின் கோயில் அடைந்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். இரவு வரையில் சன்னிதியிலேயே அமர்ந்து தியானித்தார். அப்போதும் அவரது நோய் குணமாகவில்லை. அப்படியே உறங்கிவிட்டார்.

அப்போது நடராஜ பெருமான் அவரது கனவில் தோன்றி அப்பனே, நாம் உனக்கு அடையாளம் சொன்ன தட்சிணாமூர்த்தி இவர் அல்லர். இதே ஊரில் ஒருவன் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் செல் என்றார். அதன்படி அடுத்த நாள் காலையில் அலைந்து திரிந்து நடராஜ பெருமான் கனவில் சொன்ன தட்சிணாமூர்த்தியைக் (ஸ்வாமிகள்) கண்டுபிடித்தார் முதலியார். பிறகு ஸ்வாமி கொடுத்த பிரசாதத்தை உட்கொண்டார். அந்தக் கணமே முதலியாரைப் பிடித்திருந்த வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. ஆனந்தம் மேலிட, ஸ்வாமியைப் பலவாறு துதித்து பழம் முதலிய பொருட்களைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமானால் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டதால் அருணாசலம் என்கிற ஸ்வாமி. அதன்பிறகு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்றே வழங்கப்படலானார்.இவர் 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்..

மடாலயம் என்றாலும் மிகப்பெரிய கோயிலாகவே திகழ்கிறது. பலிபீடம், நந்திதேவர் பிராகாரம் என்று விஸ்தாரமாகவே இருக்கிறது மடாலயம் மணி ஒசையும் மத்தள முழக்கமும் சேர பூஜைகள் நடக்கின்றன. இந்த மத்தளத்தை வழங்கியவர் சரபோஜி மன்னர். அதுபோல் ஜீவசமாதியில் இருக்கும் லிங்கத் திருமேனிக்கு அணிவிக்கப்படும் பதக்கத்தையும் இந்த மன்னரே வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு பெருந்திரளான கூட்டம் வருகிறது. பகல் முழுதும் பூஜைகளைத் தரிசித்து அன்று இரவு தங்கி மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஆவணி மாத உத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. வருடாந்திர வைபங்கள் அனைத்தும் இங்கு குறைவில்லாமல் நடந்து வருகின்றன. தற்போது தவத்திரு குமாரனந்த ஸ்வாமி மற்றும் தவத்திரு பிரமானந்த ஸ்வாமி ஆகிய இருவரும் பட்டத்தில் உள்ள இரு குரு மகா சன்னிதானங்கள் ஆவார்கள். 1984 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் பட்டத்தில் இருந்து வருகிறார்கள். மகான்கள் பிறக்கிறார்கள். மக்களின் சுக துக்கங்களுக்காக தங்களை வருத்திக்கொண்டே வாழ்க்கிறார்கள். மகான்களின் ஜீவன் ஒரு கட்டத்தில் அடங்குதல் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் எங்கும் வியாபித்து தங்களது இன்னருளை இந்தப் பூவுலகுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பரிபூரணமான ஒரு சாட்சி திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிதான்.

மடப்புரம் என்பதே திருவாரூர் நகரத்தின் ஒரு பகுதி. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே மடப்புரம் இருக்கிறது.மிகவும் அருமையாக இருக்கிறது.. சமாதியின் பின்புறம் அமர்ந்து தியானம் செய்ய அருமையான அனுபவங்களை பெறலாம் .

திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயில் பிரமாண்டத் தேவரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூரின் அடையாளம் சொல்பவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் ஸ்ரீகுரு தட்சிணமூர்த்தி ஸ்வாமியின் மடாலயம் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார். இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் கைவரப்பெற்று பல சித்து வேலைகளைப் புரிந்தார். தட்சிணாமூர்த்தி ஸ்வாமி வியாதிகளுடனும் விரக்தியடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் தனது இறுதிகாலத்தில் திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து கிடைத்ததை உண்டு நாட்களை நகர்த்தியவர். 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்.

ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் பூஜை சிறப்பானது. ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி  நண்பகல் 12 மணிக்கு ஜீவசமாதி ஆனதால், அந்த வேளையில் நடக்கும் பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிற்று. திருவாரூரில் வசிக்கும் ஆன்மிகப் பெருமக்கள் பலர் இந்த பூஜையைத் தரிசிக்க தவறுவதில்லை. சாதுக்கள் மடம் என்பதால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் அதிகம் வந்து போகிறார்கள். இந்த மடாலயத்துக்கு சாதுக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். மடாலயத்தின் சார்பாக பூந்தோட்டம் ஒன்றும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு மலரும் பூக்களை சாதுக்களே பறித்து அவற்றை மாலைகøளாகக் கட்டி அணிவித்து வருகிறார்கள்.

குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி எப்படி இருப்பார் என்றெல்லாம் அறிந்து கொள்வதற்கு அவரது புகைப்படங்கள் இன்று இல்லை. என்றாலும் புலித்தோலின் மேல் அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருவுருவத்தையே பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வாமியின் வலக்கால் சற்று நீண்டு தரையில் பதிந்திருக்க. அதன் மேல் தன் இடக்காலை வைத்து அதாவது கால் மேல் கால் வைத்த கோலத்தில் காணப்படுகிறார். இடக்கை வலது தொடையைத் தொட்டவாறும் வலக்கை சின் முத்திரை காண்பித்தவாறும் திகழ்கின்றன. ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் வாழ்க்கைச் சரிதத்தை மெள்ளப் புரட்டுவோம். திருச்சிக்கு அருகே உள்ள சிற்றூர் கீழாலத்தூர். இங்கே சிவசிதம்பரம் பிள்ளை மீனாம்பிகை தம்பதியர் வசித்தனர். பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர் சிவசிதம்பரம் பிள்ளை. இந்தத் தம்பதிக்கு மக்கட்பேறு அமையவில்லை. எனவே பல தலங்களையும் தரிசித்து வந்தனர்.

ஒருமுறை இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். அங்கே மலையுருவாகத் திகழும் மகாதேவனை வழிபட்டு கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர். இரவுப் பொழுதில் அங்கேயே தங்கினர். அன்றிரவு இருவரின் கனவிலும் அண்ணாமலையார் தோன்றி குழந்தையே இல்லாத உங்களது குறையைப் போக்க நானே குழந்தையாக உங்களுக்குப் பிறப்பேன். நீங்கள் ஊருக்கு சந்தோஷத்துடன் புறப்படுங்கள் என்று அருளினார். இருவரும் விழித்துக் கொண்டனர். தங்களுக்கு வந்த இனிமையான கனவைப் பகிர்ந்து கொண்டனர். அண்ணாமலையாரின் அருள் திறனை நினைத்து வியந்தனர். அடுத்த நாள் காலை கோயில் சென்று ஆண்டவனுக்கு நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர். கனவு பலித்தது. மீனாம்பிகை அம்மையார் மணிவயிறு வாய்க்கப் பெற்றார். 10 மாதங்கள் கழித்து நல்ல ஆண் மகனை ஈன்றெடுத்தார். திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் அருணாசலம் என்றே சிசுவுக்கு நாமகரணம் சூட்டினர். (இவர்தான் பின்னாளில் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என அறியப்பட்டார்.) நன்றாகவே வளர்ந்து வந்தான் குழந்தை. இரண்டாண்டுகள் கழித்து மீனாம்பிகை அம்மையார் மீண்டும் கருவுற்று இன்னொரு சத்புத்திரனைப் பெற்றெடுத்தார். அவனுக்கு நமசிவாயம் என்று பெயர் சூட்டி இருவரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.

குழந்தைகளுக்கே உண்டான சில குணங்களையும் தாண்டி அருணாசலம் வளர்ந்தான். சில நேரங்களில் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரங்களில் மவுனம் அனுஷ்டித்து எதையோவெறித்துப்பார்த்தபடிஇருப்பான். அருணாசலத்தின் நிலைமை குறித்துப் பெற்றோர் கவலைப்பட்டனர். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசாமலேயே இருந்தால் பெற்றோர் கலங்க மாட்டார்களா? இந்த நிலையில் ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் துறவி ஒருவர் எழுந்தருளினார். காவி உடை உடலெங்கும் திருநீறு. கழுத்தை அலங்கரிக்கும் ருத்திராட்ச மாலைகள். அண்ணாமலையாரே தன் இல்லத்தில் எழுந்தருளினாரே என்று அதிசயித்த சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவயோகியாரின் முன் கைகட்டி வாய் பொத்தி பணிவுடன் நின்றார். தவம் இருந்து பெற்ற எங்கள் புதல்வன் அருணாசலம் பேசாமல் இருக்கிறான். அவனது துவாய்மலர்ந்துவார்த்தை முத்துக்கள் உதிர்வதற்காக காத்திருக்கிறோம். ஆனால் அது கைகூடவில்லையே, ஏன் ஸ்வாமி? என்று கண்கள் பனிக்கக் கேட்டார்.

அப்படியா? அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்டார் துறவி. உடனே துறவியை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை தன் மூத்த பிள்ளை அருணாசலத்தைக் காட்டினார். அப்போது அந்தப் பிள்ளை கண்களை மூடியபடி தியானத்தில் திளைத்திருந்தது. துறவியார் மெள்ளப் புன்னகைத்தார். பிறகு சிவசிதம்பரம் பிள்ளையை நோக்கி இந்தப் பிள்ளை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்த செல்வம். இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அவதாரம் எடுத்திருக்கிறது. நன்றாகவே பேசும். இப்போது உங்கள் புதல்வனுடன் பேசிப் பாருங்களேன் என்றார். சிவசிதம்பரம் பிள்ளையோ குரல் தழுதழுக்க குழந்தாய் அருணாசலம், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்காய்? பேசப்பா, உன் மழலை மொழியைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார். அவ்வளவுதான் 5 வருடங்களாகப் பேசாமல் இருந்த அந்த இறைவனின் அவதாரம் முதன்முதலாகப் பேசியது சும்மா இருக்கிறேன். சரிப்பா, சும்மா இருக்கிறாயா, நீ யார்? என்றார் துறவி. மூடிய கண்களைத் திறக்காமலேயே புன்னகையோடு நீயேதான் நான், நானேதான் நீ என்று சுருக்கமாகப் பதில் சொன்னது குழந்தை. சந்தோஷம். உனது பதில் சத்தியம் நான் புறப்படுகிறேன். என்ற துறவி விடைபெற்றார். பெற்றவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.

சிறுவன் அருணாசலம் சொன்ன வார்த்தைகள் எத்தனை அர்த்தம் பொதிந்தவை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். துறவியாக வந்தவர் திருவண்ணாமலையில் வாழும் அண்ணாமலையாரே, நீயேதான் நான், நானேதான் நீ என்றால் அண்ணாமலையாரின் திரு அவதாரமே ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்பது விளங்குகிறது. அல்லவா? ஒரு குழந்தையா இப்படிப் பேசுகிறது? இப்படி செய்கிறது என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் இருந்தது தட்சிணாமூர்த்தியின் செயல்கள். ஒருநாள் காலை வேளையில் சிவசிதம்பரம் பிள்ளை தன் துணைவியாரிடம் நான் திருச்சிக்குப் போய் தாயுமானவரைத் தரிசித்து வருகிறேன் என்று வீட்டை விட்டுப் புறப்பட இருந்த நேரம். அருணாசலம் அவரை எதிர்கொண்டான். ஐயா, இன்னும் சற்று நேரத்தில் உம்மைப் பார்ப்பதற்காக உறவுக்காரர்கள் இருவர் இங்கே வர இருக்கிறார்கள். எனவே உமது பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது என்றான். பிள்ளையின் கீர்த்தி தெரிந்திருந்ததால் தந்தையும் பயணத்தை தள்ளி வைத்தார். சொல்லி வைத்தாற்போலவே உறவுக்காரர்கள் அவர்களது வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர். இதுபோல பல விஷயங்களைத் தன் ஞான திருஷ்டியால் பலருக்கும் சொன்னார் தட்சிணாமூர்த்தி ஸ்வாமி.

ஒருமுறை பள்ளியில் சுவடிகளைத் தனக்கு முன்பாக வைத்துக்கொண்டு கண்களை மூடி தியானத்தில் இருந்தார் ஸ்வாமி. அப்போது அவரது ஆசிரியர் அருகே வந்து தம்பி கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறாயே, பாடங்களைப் படித்துவிட்டாயா? என்று கேட்டார். படித்தாயிற்று என்றார் ஸ்வாமி. சந்தேகப்பட்ட ஆசிரியர் எங்கே படித்ததைச் சொல். கேட்கிறேன் என்று சொல்ல சுவடியைப் பார்க்காமலேயே பாடங்களை அனைத்தையும் கடகடவென ஒப்புவித்தார் ஸ்வாமி அதன்பிறகு பாலகனான ஸ்வாமியின் மேல் ஆசிரியருக்கு மதிப்பு கூடியது. இதே போன்ற சம்பவம் இன்னொரு நாளும் நிகழ்ந்தது. ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் இருக்கும்போது அவரைப் பார்த்து ஸ்வாமி, உங்கள் குழந்தை வீட்டுத் திண்ணையில் இருந்து கீழே விழுந்துவிட்டதால் கை முறிந்துவிட்டது. உடனே போய்ப் பாருங்கள் என்றார். ஆசிரியர் பதற்றத்துடன் வீட்டுக்கு ஓடினார். வழியிலேயே அவரது வீட்டு வேலையாள் ஓடிவந்து ஸ்வாமி சொன்ன அதே விஷயத்தைக் கூறினான். உடனே இருவரும் ஓடிச்சென்று சற்றும் தாமதியாமல் குழந்தைக்கு வேண்டிய சிகிச்சைகளை செய்தனர். அதன்பின் பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஸ்வாமியின் முன் பவ்யமாகக் கைகட்டி நின்றார். ஆசிரியரை அவரது இருக்கையில் அமருமாறு ஸ்வாமி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மறுத்துவிட்டார். ஆசிரியர். மரியாதைக்கும் அபாரமான ஞானத்துக்கும் உரியவரான தங்களின் முன்னால் நான் அமர்ந்திருப்பது தகாது என்று கூறினார். இந்த நிலை தொடர்ந்ததால் ஒரு கட்டத்தில் பள்ளிக்குச் செல்வதையே நிறுத்திவிட்டார் ஸ்வாமி. எனவே அவர் பள்ளிக்குச் சென்றது வெறும் 3 மாதமே.

கீழாலத்தூரை அடுத்த ஒரு சிற்றூரில் ஸ்வாமி இருந்தபோது ஆராவமுத ஐயங்கார் என்பவர் தன் துனைவியார் லட்சுமி அம்மாளுடன் ஸ்வாமியைத் தரிசிக்க வந்தார். ஐயங்காருக்கு இருந்த ஒரே குறை அவருக்கு மழலை பாக்கியம் இல்லாமல் இருந்ததுதான். அரங்கநாதப் பெருமான் அவர்களது கனவில் ஒருநாள் தோன்றி தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் அடையாளங்களைச் சொல்லி அந்த சித்த புருஷனின் அனுக்கிரகத்தால் உங்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று அருளினார். அதன்படி ஐயங்காரும் அவர் மனைவியும் ஸ்வாமிகளைச் சந்தித்து அவருக்குப் பணிவிடைகள் செய்தனர். இதை அடுத்த லட்சுமி அம்மாளுக்கு அழகான ஆண் மகவு பிறந்தது. இதன் பிறகும் அவ்வப்போது இருவரும் குழந்தையுடன் வந்து ஸ்வாமியை சந்தித்து ஆசி பெற்றுத் திரும்புவது வழக்கம். ஒருநாள் தொட்டிலில் குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காரணத்தால் தம்பதி ஸ்வாமியை தரிசிக்கச் சென்றனர். தன்னைத் தரிசிக்க வந்த ஐயங்காரிடம் உங்கள் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. குழந்தையை வேறு தொட்டிலில் போட்டுவிட்டு வந்துள்ளீர்கள். விரைவாகச் சென்று குழந்தையைக் காப்பாற்றுங்கள் பயப்பட வேண்டாம். குழந்தை சுகமாகத்தான் இருக்கிறது என்றார்.

தம்பதி வீட்டை நோக்கி ஓடினார்கள். அதே நேரத்தில் ஸ்வாமியின் திருவருளும் அங்கே அரங்கேறியது. பூட்டப்பட்ட ஐயங்காரது வீட்டில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே எப்படிச் செல்வது என்று ஊர்க்காரர்கள் குழம்பிய நேரத்தில் உடலெங்கும் திருநீறு பூசி ஒரு சாமியார் அங்கே வந்தார். வெறும் கோவணம் மட்டுமே அணிந்திருந்த அவர் அந்தத் தீயின் மத்தியில் விட்டுக்குள் சென்ற தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் பாலகனைப் பத்திரமாகக் கொடுத்துவிட்டு கூட்டத்தில் கலந்து மறைந்தார். எல்லாம் நடந்து முடிந்தவுடன் ஐயங்கார் தம்பதி அரக்கப் பரக்கத் தங்கள் வீட்டுக்கு வந்தனர். எங்களது செல்ல மகனுக்கு என்ன ஆயிற்று என்று இருவரும் பதைபதைத்தபோது குழந்தையை அவர்களிடம் தந்தாள் அந்தப் பெண்மணி. கூடவே ஒரு சாமியார் வந்து குழந்தையைக் காப்பாற்றி தன்னிடம் கொடுக்கச் சென்றதையும் கூறினாள். அப்போதுதான் ஐயங்கார் தம்பதி நடந்த சம்பவத்தை உணர்ந்தனர். தங்கள் வீட்டுக்கு வந்து தன் அருளால் பிறந்த பாலகனை அவரே காப்பாற்றிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்து இருந்த இடத்தில் இருந்தே அவருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். அதோடு வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைக்கு ஸ்வாமியின் அருணாசலம் என்ற பெயரையே சூட்டினர்.

பல ஊர்களுக்கும் பயணித்த ஸ்வாமி பழங்களத்தூர் என்ற சிற்றூரை அடைந்தார். அங்கே நதிக்கரை ஓரமாக ஸ்வாமி நடந்து கொண்டிருந்த போது ஓர் அன்பர் எதிர்ப்பட்டார். ஏதோ கவலை நிறைந்த முகத்துடன் காணப்பட்ட அந்த அன்பர் ஸ்வாமியைப் பார்த்ததும் அவரது கால்களில் விழுந்து நமஸ்கரித்தார். அன்பரின் சோகம் ததும்பும் முகத்தைப் பார்த்த ஸ்வாமி சொல் என்பது போல் தலையை அசைத்தார். அந்த அன்பர் ஸ்வாமி என் மனைவிக்கு இது பிரசவ நேரம். உரிய நேரம் கடந்த பிறகும் கடந்த நான்கு தினங்களாக குழந்தையைப் பிரசவிக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறாள். இதை பார்க்க வேதனையாக இருக்கிறது. தாய்க்கும் சேய்க்கும் ஏதேனும் ஆபத்து நிகழுமோ என்று என் மனம் சஞ்சலப்படுகிறது. அப்படி எதேனும் நிகழ்ந்துவிட்டால், நானும் உயிரோடு இருக்க மாட்டேன் என்று புலம்பி அவரது திருவடிகளில் விழுந்தார். அப்பனே எழுந்திரு. கவலைப்படாதே. நீ உன் வீடு செல்வதற்கு முன் அங்கே சுகப் பிரசவம் ஆகி ஆண் குழந்தை பிறந்திருக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் எந்த ஆபத்து இல்லை என்று சொல்ல அந்த அன்பர் பேரானந்தத்துடன் வீட்டுக்கு ஓடினார். அங்கே அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஸ்வாமியின் அருள் வாக்குப்படி தாயும் சேயும் நலமாக இருந்தனர். அந்த அன்பர் ஏகத்துக்கும் மகிழ்ந்து ஸ்வாமியைத் தான் சந்தித்த இடத்துக்கு மீண்டும் வந்து அவரைத் தரிசித்து நமஸ்கரித்தார். அதோடு ஸ்வாமியின் பெருமைகளைப் பற்றி ஊர் மக்களிடம் எடுத்துரைக்க பலரும் அங்கே கூட ஆரம்பித்தனர்.

ஸ்வாமி அங்கிருந்து புறப்பட்டு நீலப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி, முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதங்களை நிகழ்த்தினர். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாட்கள் இருந்தார். புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒரு பெண்ணுக்கு இங்கே அருள் புரிந்தார். பல வருடங்களாகப் பெற்றோருக்கு இம்சையாக இருந்த அந்தப் பெண் ஸ்வாமியின் அருளால் நலம் பெற்றாள். திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட ஸ்வாமி, மயிலாப்பூர். திருக்கழுக்குன்றம். சிதம்பரம் காரைக்கால், நாகப்பட்டினம் என்று பயணித்தார். நாகப்பட்டினத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அங்கே வசித்த அன்பர் ஒருவர் ஸ்வாமிக்குத் தினமும் தன் வீட்டில் இருந்து உணவு கொடுத்து வந்தார். ஒருநாள் அவரால் உணவு எடுத்து வர முடியாமல் போகவே தன் மகனிடம் கொடுத்து அனுப்பினார். உணவு எடுத்துக்கொண்டு மகன் செல்லும் வழியில் கொடிய பாம்பு ஒன்று அவனைத் தீண்டிவிட்டது. ஸ்வாமி, உங்களுக்கு உணவு கொண்டு வந்த என்னைப் பாம்பு கடித்துவிட்டதே என்று அலறி பேச்சு மூச்சில்லாமல் தரையில் சரிந்தான். இந்த நேரத்தில் தான் இருந்த இடத்தில் இருந்தே நடந்ததை அறிந்த ஸ்வாமி கொடிய நாகத்தின் பிடியில் சிறுவன் சிக்கிவிட்டான் பாவம். அவனை உடனே காப்பாற்று, விரைந்து செல் என்று ஒரு கீரிப்பிள்ளைக்கு உத்தரவிட்டார். அந்த நேரத்தில் ஸ்வாமியுடன் இருந்தவர்கள் எங்கோ ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ உத்தரவிடுகிறார் போலிருக்கிறது என்று புரிந்து அமைதியானார்கள்.

அதே நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்து கிடந்த இடத்தருகே விரைந்தோடி வந்த கீரிப்பிள்ளை ஒன்று நகர்ந்து கொண்டிருந்த பாம்பைக் கடித்துக் கண்டதுண்டம் ஆக்கியது. இதற்குள் மகன் பாம்பு கடித்து மூர்ச்சை ஆகிக் கிடக்கும் செய்தியை அறிந்த தந்தை ஓடோடி வந்தார். ஸ்வாமிக்கு எடுத்துச் சென்ற பலகாரங்கள் ஒருபுறம் விழுந்து கிடக்க மறுபுறம் மகன் பேச்சு மூச்சிலாமல் கிடக்கும் கோலம் கண்டார். அவனை வாரி எடுத்துக்கொண்டு வந்து ஸ்வாமியின் முன் கிடத்தினார். பிறகு கண்ணீருடன் ஸ்வாமி, என் மகனை சர்ப்பம் தீண்டிவிட்டது. என் செல்வனைத் தாங்கள்தான் காப்பற்ற வேண்டும் என்று பிரார்த்தித்தார். ஸ்வாமிகள் புன்னகைத்தார். கவலைப்படாதே உன் மகனுக்கு எந்த ஆபத்து இல்லை என்றவர் சிறுவனின் சிரசில் தன் திருக்கரத்தால் தடவினார். அடுத்த கணமே அவன் உடலில் இருந்த விஷம் இறங்கியது. சிறுவன் இதுவரை நடந்தவை ஏதும் அறியாதவனாக மெள்ள எழுந்தான். ஸ்வாமிகளை வணங்கினான். பாம்பு கடித்து இறந்து போன சிறுவனை மீண்டும் உயிர்ப்பித்த தகவல் அறிந்து பலரும் அவரின் அருள் பெற தேடி வந்தனர். கூட்டம் பெருத்து வருவதைக் கண்ட ஸ்வாமி, அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்தார்.

அங்கே சோமநாத ஸ்வாமி கோயில் அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றின் படுகையிலும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களின் அடியிலும் தங்கி இருந்த நாட்களைக் கழித்தார். பெரும்பாலான நேரத்தை தவம் இருப்பதில்செலவிட்டார். பசிக்கும்போது சாலையில் இறங்கி எங்கு தோன்றியதோ அங்கே உணவு யாசித்தார். எது கிடைத்ததோ அதை உண்டு வந்தார். சித்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த சோமநாத முதலியார் பெரும் செல்வந்தர். பணம் இருந்தால் போதுமா? அதை ஆண்டு அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்கவேண்டாமா? சோமநாத முதலியார் வயிறு சம்பந்தமான நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்காத வைத்தியர் இல்லை. சாப்பிடாத மூலிகை இல்லை என்றாலும் பலன் இல்லை. இறுதியாக யாரோ சிலர் சொன்னதன் பேரில் நடராஜ பெருமானைத் தரிசிக்க சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி கோயிலில் உள்ள மூர்த்திகளை வணங்கி உணவே எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்கத் தொடங்கினார்.

2 நாட்கள் சென்றன. முதலியாருக்கு நடராஜ பெருமாளின் அருள் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் காலை வேளையில் ஒரு முடிவெடுத்தார். இன்றைக்குள் எனது நோய் குணமாகவில்லை என்றால் இரவில் நடராஜரின் சன்னிதி முன்னாலேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து. கூர்மையான கத்தி ஒன்றைத் தன் இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டார். இரவுவேளை நடராஜருக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர் பணி முடிந்ததும் சன்னிதியைப் பூட்டிவிட்டு வெளியேறினார். அப்போது தூண் மறைவில் இருந்த முதலியார் வெளியே வந்தார். தில்லைப் பெருமானே என் வேண்டுகோளுக்கு நீ இணங்கவில்லை. ஆகவே நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றபடி கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. சன்னிதியில் இருந்த ஓர் அசரீரி வாக்கு. அப்பனே உனது நோய் இங்கே குணமாகாது. திருவாரூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்தால் அந்தக் கணமே குணமாவாய் என்று ஒலித்தது.. மனம் மகிழ்ந்த முதலியார் மறுநாள் அதிகாலையே திருவாரூர் புறப்பட்டார். தியாகராஜ பெருமானின் கோயில் அடைந்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். இரவு வரையில் சன்னிதியிலேயே அமர்ந்து தியானித்தார். அப்போதும் அவரது நோய் குணமாகவில்லை. அப்படியே உறங்கிவிட்டார்.

அப்போது நடராஜ பெருமான் அவரது கனவில் தோன்றி அப்பனே, நாம் உனக்கு அடையாளம் சொன்ன தட்சிணாமூர்த்தி இவர் அல்லர். இதே ஊரில் ஒருவன் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் செல் என்றார். அதன்படி அடுத்த நாள் காலையில் அலைந்து திரிந்து நடராஜ பெருமான் கனவில் சொன்ன தட்சிணாமூர்த்தியைக் (ஸ்வாமிகள்) கண்டுபிடித்தார் முதலியார். பிறகு ஸ்வாமி கொடுத்த பிரசாதத்தை உட்கொண்டார். அந்தக் கணமே முதலியாரைப் பிடித்திருந்த வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. ஆனந்தம் மேலிட, ஸ்வாமியைப் பலவாறு துதித்து பழம் முதலிய பொருட்களைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமானால் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டதால் அருணாசலம் என்கிற ஸ்வாமி. அதன்பிறகு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்றே வழங்கப்படலானார். இப்படி ஸ்வாமிகளின் மகிமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனையோ பேருக்கு நல்லாசி வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தி உள்ளார். ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் மடாலயத்தைத் தரிசிப்போமோ?

பெயருக்கு மடாலயம் என்றாலும் மிகப்பெரிய கோயிலாகவே திகழ்கிறது. பலிபீடம், நந்திதேவர் பிராகாரம் என்று விஸ்தாரமாகவே இருக்கிறது மடாலயம் மணி ஒசையும் மத்தள முழக்கமும் சேர பூஜைகள் நடக்கின்றன. இந்த மத்தளத்தை வழங்கியவர் சரபோஜி மன்னர். அதுபோல் ஜீவசமாதியில் இருக்கும் லிங்கத் திருமேனிக்கு அணிவிக்கப்படும் பதக்கத்தையும் இந்த மன்னரே வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு பெருந்திரளான கூட்டம் வருகிறது. பகல் முழுதும் பூஜைகளைத் தரிசித்து அன்று இரவு தங்கி மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஆவணி மாத உத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. அன்றுமட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குருவருள் பெற்றுத் திரும்புகிறார்கள். பிராகாரத்தில் கொத்தனார் அருணாசலம் பிள்ளை என்பவரின் சன்னிதி உள்ளது. திருவாரூர்க்காரரான இவர் ஸ்வாமியின் திருவருளுக்குப் பாத்திரமானவர். ஒருமுறை இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் ஏகாதசி விழாவுக்காக அமைக்கப்பட்ட பிரமாண்டமான பந்தலின் உச்சியில் அலங்கார வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். எப்போதும் ஸ்வாமியின் சிந்தனையாகவே இருப்பவர் இவர். அன்றும் அப்படியே இருந்தபோது திடீரெனத் தடுமாறிக் கீழே விழுந்தார். விழும்போது தட்சிணாமூர்த்திக்கு அபாயம் என்றே குரல் கொடுத்தார்.

அப்போது திருவாரூர் கமலாலயத்தின் மேல்கரையில் அமர்ந்திருந்த ஸ்வாமி. தமது வலது கரத்தை மேலே தூக்கி வைத்துக்கொண்டு வலுவான ஒரு பொருளைத் தாங்குவதுபோல தாங்கி, கீழே வைத்தார். அங்கே கூடி இருந்த பக்தர்கள் எங்கோ ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஸ்வாமியின் அருளுக்குப் பாத்திரமான பாக்கியவான் யாரோ? என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அங்கே ஸ்ரீரங்கத்தில் பனைமர அளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்த அருணாசலம் பிள்ளை தம்மை யாரோ கைப்பிடித்துத் தாங்குவதுபோல் உணர்ந்தார். அவருக்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படவில்லை. இதை சக தொழிலாளர்கள் கண்டு வியந்தனர். உடனே வேலையை அப்படியே போட்டுவிட்டு திருவாரூரை அடைந்து ஸ்வாமியைத் தரிசித்தார். அருணாசலம் பிள்ளை. பிறகு ஸ்வாமியின் ஆசியுடன் துறவு பூண்டார். பிராகாரத்தில் இருக்கிற இன்னொரு விக்கிரகம் வீர .சு. ஷண்முகானந்த ஸ்வாமியுடையது. இவர் 1931-1979 காலகட்டத்தில் இங்கு மடாதிபதியாக இருந்தவர். இவரது காலத்தில்தான் தற்போது இருக்கும் நிலைக்கு மடாலயம் விரிவுபடுத்தப்பட்டு முழுவதுமாகக் கல் திருப்பணியாக அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் 1971ல் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து 1998ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தவிர தட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு கதையால் ஆன ஒரு விக்கிரகமும் உத்ஸவ விக்கிரகமும் உள்ளது. வருடாந்திர வைபங்கள் அனைத்தும் இங்கு குறைவில்லாமல் நடந்து வருகின்றன. தற்போது தவத்திரு குமாரனந்த ஸ்வாமி மற்றும் தவத்திரு பிரமானந்த ஸ்வாமி ஆகிய இருவரும் பட்டத்தில் உள்ள இரு குரு மகா சன்னிதானங்கள் ஆவார்கள். 1984 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் பட்டத்தில் இருந்து வருகிறார்கள். மகான்கள் பிறக்கிறார்கள். மக்களின் சுக துக்கங்களுக்காக தங்களை வருத்திக்கொண்டே வாழ்க்கிறார்கள். மகான்களின் ஜீவன் ஒரு கட்டத்தில் அடங்குதல் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் எங்கும் வியாபித்து தங்களது இன்னருளை இந்தப் பூவுலகுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பரிபூரணமான ஒரு சாட்சி திருவாரூர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிதான்.

தகவல் பலகை

தலம்    : திருவாரூர் மடப்புரம்.

மூலவர்     : ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்.

ஜீவசமாதி எங்கே இருக்கிறது?: மடப்புரம் என்பதே திருவாரூர் நகரத்தின் ஒரு பகுதி. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே மடப்புரம் இருக்கிறது.

எப்படிப் போவது?: திருவாரூர் ஒரு மாவட்டத்தின் தலைநகரம். எனவே தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் இருந்து திருவாரூரை அடைவது சுலபம். கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை போன்ற எந்த ஊர்களிலிருந்தும் திருவாரூருக்கு பேருந்து வசதி உள்ளது.

தொடர்புக்கு:
தட்சிணாமூர்த்தி மேலாளர்,
ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி மடாலயம்,
மடப்புரம், திருவாரூர்-610001.
போன்: 04366-222732.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar