Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் 1,008 கலச ... பாலசுப்ரமணியம் கோவிலில் ராஜகோபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கேரளாவில் புதிய பாதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2015
11:12

தேனி: கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக வண்டிப்பெரியாரில் இருந்து சத்திரம் வழியாக புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. டைமுக்கு 19 ம் ஏரியா வழியாக எஸ்டேட் பாதை திறந்தால் பக்தர்கள் 50 கி.மீ., துாரம் சுற்றுவது குறையும் என சபரிமலை நடவடிக்கை குழு முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளது.வட மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 4 ஆண்டிற்கு முன்பு புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், ஆண்டுதோறும் கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.சபரிமலைக்கு செல்வதற்கு வண்டிப்பெரியாரில் இருந்து அரணைக்கல், மவுண்ட் எஸ்டேட், சத்திரம் வழியாக புல்மேடு செல்லும் பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. கேரள வனத்துறை கொடுத்த நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக இந்த பாதை மூடப்பட்டது. புல்மேடு நெரிசலுக்கு பிறகு மீண்டும் இந்த பாதை திறக்கப்பட்டது. குமுளி வழியாக செல்லும் பக்தர்கள் அனைவரும் தற்போது இந்த பாதை வழியாக எளிதில் சபரிமலைக்கு சென்று விடுகின்றனர். ஆனால் கம்பம்மெட்டு, கட்டப்பனை, குட்டிக்கானம் வழியாக செல்பவர்கள் கூடுதலாக 50 கி.மீ., துாரம் பயணம் செய்து சபரிமலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, கட்டப்பனை ஆனை விலாசத்தில் இருந்து டைமுக்கு 19ம் ஏரியா வழியாக 3 கி.மீ., தேயிலை எஸ்டேட்டிற்குள் செல்லும் இந்த பாதையை திறந்து விட்டால், கட்டப்பனையில் இருந்து வண்டிப்பெரியார் வந்து சத்திரம் வழியாக சபரிமலை சென்று விட முடியும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபரிமலை நடவடிக்கை குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar