பதிவு செய்த நாள்
16
டிச
2015
11:12
உபவாசம் (விரதம்) இருந்து ஜெபம் செய்யும் ஒருவர் ஆண்டவரிடம் தன்னை மிகவும் தாழ்த்தி, நல்லவர் போல் காட்டிக்கொண்டு ஜெபம் செய்தார். ஒரு உபவாச தினத்தன்று, ஒரு ஏழை தன் மருத்துவ தேவைக்காக அவரைத் தேடி வந்தான். அவனிடம் கடினமான வார்த்தைகள் பேசி அவனை விரட்டி விட்டார் ஜெபம் செய்தவர். இப்படி செய்பவர்கள், உபவாச ஜெபத்தின் தன்மையை அறிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.பைபிளில்,“மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலை வணங்கி நாணலைப் போல் இரட்டிலும், சாம்பலிலும் படுத்துக் கொள்ளுகிறதும், எனக்கு பிரியமான உபவாச நாளாய் இருக்குமோ? இதையா உபவாசம் என்றும், கர்த்தருக்கு பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?” என்று சொல்லப்பட்டிருக்கிறது.இந்த வசனத்தின்படி, வெறும் விரதங்கள் மட்டும் ஆண்டவரின் ஆசியைப் பெற உதவாது என்பது தெளிவாகிறது. இதற்கு தீர்வையும் பைபிளே சொல்கிறது.“அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் அல்லவோ எனக்கு (கர்த்தர்) உகந்த உபவாசம்,” என்று ஒரு வசனம் இருக்கிறது.இதிலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை இந்த கிறிஸ்துமஸ் கால சிந்தனையாகக் கொள்வோம்.