Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பீடாதிபதி சச்சிதானந்த சரஸ்வதி மகா ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் ஸ்டாலின் மனைவி துர்கா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2015
11:12

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், 2 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, நாடு செழிக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழவும், நல்லாட்சி நிர்வாகம் ஏற்பட வேண்டி வழிபட்டேன், என தெரிவித்தார்.

தரிசனம்: நேற்று காலை, 7:05 மணிக்கு, உறவினர்கள் மூன்று பேர் மற்றும் முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மனைவி ஆதிலெட்சுமி ஆகியோருடன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்த துர்கா, கோவில் கொடிமரம், மூலஸ்தான சன்னிதி, கண்ணாடி மண்டபத்தில் வீற்றிருந்த உற்சவர்களான ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசித்தார். தங்க விமான கோபுர பணிகளை பார்வையிட்ட பின், கோவில் பிரசாதம் சர்க்கரை பொங்கல், புளியோதரையை வாங்கி சாப்பிட்டார்.

சடாரி ஆசீர்வாதம்: அங்கிருந்து வடபத்ரசயனர் சன்னிதி அருகே, ஆண்டாள் பிறந்த நந்தவனத்தில் உள்ள ஆண்டாளை தரிசித்தார். சக்கரத்தாழ்வாரை வணங்கி விட்டு, பெரியாழ்வார் சன்னிதியில் தரிசனம் செய்து, சடாரி ஆசீர்வாதம் மற்றும் பிரசாதம் பெற்றார். வடபத்ரசயனர் சன்னிதி கோபால விசாலத்தை பார்வையிட்டு, ராப்பத்து, பகல்பத்து உற்சவம் குறித்து கேட்டறிந்த அவர், தான் வீட்டில் இருக்கும்போது திருப்பாவை படித்துள்ளதாக, பட்டர்களிடம் தெரிவித்தார். ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த துர்காவிடம், யார் பெயருக்கு அர்ச்சனை? என பட்டர்கள் கேட்டபோது, உலக நலனுக்கு, என்றார். பின் அவர் கூறியதாவது: மார்கழி மாதத்தில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. நான் சென்னையில் இருக்கும்போது, கோவில்களுக்கு செல்வேன்; நேற்று, ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்கு சென்றேன். மார்கழி மாதத்தில் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாளை தரிசிப்பது மேலும் சிறப்பு. நாடு செழிக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழவும், வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளவும், நல்லாட்சி நிர்வாகம் ஏற்படவும் வேண்டினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 9:15 மணிக்கு புறப்பட்டு சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar