பழநி: தமிழக கோயில்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டி இந்துமக்கள் கட்சி சார்பில் பழநிகோயிலின் 689 படிக்கட்டுகளில் சிறப்பு பரிகார பூஜை நடந்தது. இந்துமக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், துரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பழநிமலைக்கோயில் பாதவிநாயகர் கோயிலில் சிறப்புபூஜை செய்து வழிப்பட்டனர். அதன்பின் தேங்காய்,பழம், வெற்றிலை பாக்குடன் 689படிகளிலும் அபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. பொதுச்செயலாளர் ராமரவிக்குமார் கூறுகையில்,"" தமிழக கோயில்களின் பாதுகாப்பு மோசமாக உள்ளது. கோயில்களின் புனிதம் பாதுகாக்க ஆடைக்கட்டுப்பாடுஅவசியம்தேவை. கோயில் தங்கக்கோபுரம் அருகே தற்கொலை, பாதுகாவலர்கள் குடித்து கும்மாளம் போன்றவை பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்காகவே பரிகார படிபூஜை செய்தோம். தனியார் நிறுவன உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். திருப்பதியை போல பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். , என்றார். மாவட்ட துணைத்தலைவர் மனோஜ்குமார், பழநி நகர தலைவர் சதீஷ் பங்கேற்றனர். பழநியில் தடை: பழநி அருகே நெய்காரப்பட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஜல்லிக்கட்டுக்கு வழங்கிய தடையை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். "ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என கூறி, அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மாடுபிடி வீரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.