மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக வந்த குன்றத்து குமரன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 10:04
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பட்டனர். மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்.28) நடைபெற்றது. அதில் பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று மாலையில் புறப்பட்டனர். இன்று அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டினப் பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 1ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறுவர். மே 2 காலையில் சுவாமி, தெய்வானை ஆகியோர் மதுரை கோயிலில் புறப்பாடாகி, தெற்காவணிமூல வீதி மண்டபத்தில் எழுந்தருள்வர். மாலையில் பூப்பல்லக்கில் புறப்பாடாகி, பவளக்கனிவாய் பெருமாளுடன் திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும். உற்ஸவர்கள் மதுரைக்கு செல்வதால் மே 2வரை தங்கரதம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.