Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வையப்பமலை பாலசுப்ரமணியம் கோவிலில் ... விஷ்ணு கோவில்களில் கூடார வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்ணெய்நல்லுார் தீர்த்தவாரி விழா:பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
11:01

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரரை தென்பெண்ணையாற்றில் நடக்கும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லவேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில், ஆண்டுதோறும் தை மாதம் 5ம் தேதியன்று, ஆற்றுத்திருவிழா நடக்கிறது. இதில், பல்வேறு ஊர்களை சேர்ந்த சுவாமிகளை கொண்டுவந்து தீர்த்தவாரி செய்து, ஊர்வலமாக ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம்.மணலுார் பேட்டை, திருக்கோவிலுார், ஏனாதிமங்கலம், பேரங்கியூர், பிடாகம், கண்டரக்கோட்டை ஆகிய ஊர்களில் ஆற்றுத்திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. மணலுார்பேட்டையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருக்கோவிலுாரில் வீரட்டானேஸ்வரர், அதுல்யநாதேஸ்வரர், பேரங்கியூரில் பரிக்கல் லட்சுமிநரசிம்மர் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோவில்களின் உற்சவர்களுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. திருவெண்ணெய்நல்லுாரில், சுந்தரரை தடுத்தாட்கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடைய கிருபாபுரீஸ்வரர் கோவிலிலிருந்து உற்சவரை, ஏனாதிமங்கலம் அல்லது பேரங்கியூரில் நடக்கும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுந்தரர் பாடிய தேவாரத்தின் ௧௦ பதிகங்களில், பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லுார் அருட்டுறையுள்... என, தென் பெண்ணையாற்றை குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரரை, பெண்ணையாற்றில் நடக்கும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லாமல் இருப்பது வேதனையளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar