பதிவு செய்த நாள்
13
ஜன
2016
11:01
மல்லசமுத்திரம்: வையப்பமலை பாலசுப்ரமணியம் கோவிலில் நடந்த, சத்ரு சூரசம்ஹார பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருச்செங்கோடு அடுத்த, மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலையில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியம் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், வாரம் தோறும் செவ்வாய்கிழமை, சத்ரு சூரசம்ஹார விழா சிறப்பாக நடக்கறது. அதன்படி, நேற்று காலை, 10.30 மணி முதல், பகல், 12 மணி வரை பூஜை கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, சுவாமிக்கு அரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற நறுமணப் பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, சுவாமி வெள்ளி கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் பிரச்னை, குடும்ப பிரச்னை உள்ளவர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டால், காரியம் கைகூடும் என்பது ஐதீகம். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.