கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக் கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலது கையின் கீழே இடது கையை சேர்த்து விபூதியை வாங்க வேண்டும். விபூதியை இடக்கையில் கொட்டி அதிலிருந்து மறுபடி எடுத்து தரித்தல் கூடாது. வலக்கையில் பெற்றுக்கொண்ட விபூதியை அப்படியே நெற்றியில் தரிப்பது நலம். அவ்வாறில்லாமல் ஒரு சிறு தாளில் விபூதியை இட்டு அதிலிருந்து எடுத்து தரிக்கலாம். வயதில் நம்மைவிட இளையவர் கைகளிலிருந்து விபூதி எடுத்துத் தரிக்கக்கூடாது. விபூதியை நம் கையில் இடச்செய்து அதிலிருந்துதான் எடுத்து தரித்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை இளையவர் கைகளிலிருந்து எடுத்து தரிப்பதில் தவறில்லை.