Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு ... வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
11:01

வில்லியனுாரில் பழம் பெருமை வாய்ந்த, கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில், திருக்குளத்துடன் சேர்ந்து ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவிலின் நான்கு திசைகளிலும் வாயில்கள் உள்ளன. தெற்கு வாயிலில் 94 அடி உயரமுள்ள உயர்ந்த ஏழு நிலை கோபுரமும், பிற வாயிகல்கள் சிறிய கோபுரங்களை கொண்டு சிறப்புடன் விளங்கி வருகிறது. கோவிலில், சுவாமி வீதியுலா வரும் வகையில், நிலைத்தேர்கள் இருப்பது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். திருக்காமீஸ்வரர் தேர், 67 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது. 84 டன் எடையுள்ள இத்தேரில் நான்கு இரும்பு சக்கரங்களும், இரண்டு மர சக்கரங்களையும் கொண்டது. அதேபோன்று, 33 அடி உயரத்தில் 21 அடி அகலமும் கொண்ட கோகிலாம்பிகை தேரும், 26 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட விநாயகர் தேரும் உள்ளது.மூன்று தேர்கள் முழுவதும் மரத்தால் கட்டப்பட்ட நிலைத் தேர்களாகும். மூன்று தேர்களிலும் பல அழகிய சிலைகள், குதிரை, ஆலி, குரங்கு உள்ளிட்ட சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடந்து வருகிறது. பிரெஞ்சு ஆட்சி காலத்திலிருந்து, இது வரை தேரோட்டத்தை, புதுச்சேரி மாநில கவர்னர் வடம் பிடித்து துவக்கி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தேரோட்டத்தின்போது, கீழ வீதி தேர் நிலையில் இருந்து புறப்படும் தேர், கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைகிறது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar