Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மாதேஸ்வரர் கோவிலில் மண் உருவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆசியாவின் பெரிய உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு 20ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
12:01

திருநெல்வேலி: ஆசியாவிலேயே பெரியதும், ராஜகோபுரத்தை கொண்டதுமான நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி விமரிசையாக நடக்கிறது. திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட கணபதி ஆலயம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார். இடது மடியில் அம்பாளை தாங்கியிருக்கிறார். இதில் நீராடி விநாயகரை வழிபட்டால் தோஷங்கள் யாவும் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது.

1000 ஆண்டுகள் பழமை: இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதை பறைசாற்றுகிறது. இக்கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 2008ல் இங்கு திருப்பணிக்கான முயற்சிகள் நடந்தன. அறநிலையத்துறை வழங்கிய நிதி 9 லட்சத்து 70 ஆயிரம் மூலம், ராஜகோபுரப்பணிகள் நடந்துள்ளன. பொதுமக்களிடம் பெறப்பட்ட ரூ 2 கோடி நிதியின் மூலம் கன்னிமூல கணபதி மண்டபம், முருகன்வள்ளி மண்டபம் உள்ளிட்ட ஐந்து மண்டபங்கள் 3 அடி உயரத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர், காந்திமதியம்மன், புதிதாக 16 விநாயகர்கள் என சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னமும் கூட போதிய நிதியின்மையால் சுற்றுச்சுவர் பணி பாதியில்நிற்கிறது. இக்கோயிலில் இன்று 18ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்குகிறது.20ம் தேதி புதன் கிழமை காலை 5.45 மணிமுதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் வழிபட்டால், திருமணத்தடை நீங்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருகும்.என்ற நம்பிக்கையுள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar