பதிவு செய்த நாள்
20
ஜன
2016
12:01
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்றுபரிவார தெய்வ சன்னதிகளுக்கான பாலாலயம் நடக்கிறது. இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கானதங்க கவசத் திருப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.தற்போது கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடந்த நவ.,14ல் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு பாலாலயம் நடந்தது .தற்போது கிருஷ்ணன்,யோக நரசிம்மர்,உக்ர நரசிம்மர்,சம்ஹார நரசிம்மர்,வீர ஆஞ்சநேயர், நர்த்தன கிருஷ்ணன், ஆழ்வார் ஆச்சார்யர்கள், ராமர்,லெட்சுமணன், சீதை உள்ளிட்ட பரிவார தெய்வ சன்னதிகளுக்கு பாலாலயத்திற்காக நேற்று முன்தினம் யாகசாலை பூஜை துவங்கியது. இரண்டு நாட்களில் மூன்றுயாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, இன்று காலை நான்காம் யாகசாலை பூஜை காலை9 மணிக்கு நிறைவடைந்து, கடம் புறப்பாடாகி பாலாலயம் நடைபெற உள்ளது. ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.