குத்தாலம் மகா மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2016 02:01
நாகை: நாகை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி மாதங்களில் உற்சவங்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் தைமாத 3-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 10ம் ஆண்டு பால்குடத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காவிரி தீர்த்தப் படித்துறையில் இருந்து புறப்பட்ட கரகம் மற்றும் பால்குடங்கள் உத்திரமேலவீதி, ஹைஸ்கூல் ரோடு, பஞ்சுகாரசெட்டித்தெரு, பேருந்து நிறுத்தம், எடத்தெரு வழியாக ஊர்வலம் வந்து கோயிலின் நான்கு வீதிகளைச் சுற்றி வந்து சன்னதியை அடைந்தது. அங்கு மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு திருமணவரம், மாங்கல்யபலம், குழந்தைவரம் வேண்டி திருவிளக்கு பூஜை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் குத்தாலம் நகரவாசிகள் செய்திருந்தனர்.