பதிவு செய்த நாள்
08
பிப்
2016
05:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசை, மகோதய புண்ணிய காலமாக 144 ஆண்டுகளுக்கு பின்பு வந்ததால் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
காலை அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், சப்பரங்களில் விநாயகர், அஸ்தர தேவர் புறப்பாடாகி சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். அங்கு யாகம், பூஜைகள் முடிந்து அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்வசம் நிகழ்ச்சி, தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர். பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு மாசி மகத்தை முன்னிட்டு பிப். 22 அன்றும் நடக்கிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.