Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசை முன்னிட்டு காவிரியில் ... சபரிமலை ஐயப்பன் கோவில் சம்பிரதாயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலட்சுமி வீட்டில் தங்க வேண்டுமா திருச்சி கல்யாணராமன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
12:02

மதுரை: மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடந்தது.திரவுபதி மானம் காத்தல் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: எந்த ஒரு செயலை செய்தாலும் கடவுள் அருள் நமக்கு தேவை என்பதை நாம் உணர வேண்டும். நாம் ஏதாவது ஒரு செயலை செய்த பின் நான் தான் செய்தேன் என்று சொல்லிக்காட்ட கூடாது. நம் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அடிக்கடி ஜோசியம் பார்ப்பதை தவிர்ப்பது நலம்அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறர் குறை கூறும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது. அதே போல் நம்மிடம் மது அருந்துதல் மற்றும் பிற தீய பழக்கங்கள் இருந்தால் மகாலட்சுமி நம் வீட்டில் தங்கமாட்டாள். கூனி இல்லை என்றால் ராமாயணம் இல்லை. சகுனி இல்லை என்றால் மகாபாரதம் இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் அது ஆரம்பிக்கும் போதே தடுத்திட வேண்டும். விதி என்பது தீர்மானிக்கப்பட்ட உண்மை, அதை யாராலும் வெல்ல முடியாது. நாம் பிறரைப் பற்றி குறை கூறுவதை தவிர்த்து, நன்றி மறவாத வாழ்க்கை வாழ வேண்டும்.

பொழுது போகாமல் நேரத்தை வீணாக்குபவர்கள் இறை சிந்தனையில் இறங்கினால் மனதில் தெளிவு பிறக்கும். நல்லவர்களுடன் சேர்ந்து நல்ல பாதையில் பயணித்து, கடவுள் ஒருவர் தான் நம்மை காப்பார் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அச்சுதன் என்றால் நம்மை நழுவவிடாதவன் என்று அர்த்தம். கோவிந்தா என்றால் நம்மை காக்கிறவன் என்று அர்த்தம். கஜேந்தாழ்வார், பிரகலாதன், திரவுபதி இவர்களுக்காக மட்டும் தான் பகவான் அழுதார், என்றார். இன்று, பார்த்தனும் பசுபதியும் என்ற தலைப்பில் மாலை 6.30 மணிக்கு சொற்பொழிவு நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar