சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை , இன்னும் புண்ணிய க்ஷேத்திரங்களிலுள்ள பலவகை தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால், மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி தீர்த்தங்களும் மகாமக குளத்தில் நீராட வருவதாக ஐதீகம். எனவே கும்பமேளா நீராட்டத்தை விட இது உயர்ந்ததாக கருதப்படுகிறது.