சத்தியமங்கலம் செல்லாண்டியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2016 11:03
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் நடந்தது. தற்போது இருபத்தி நான்கு நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. இது, 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அன்றைய தினம், 108 சங்கு அபிஷேகம் நடக்கிறது. மேலும் அன்று மதியம் தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.