Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவில் விழா: சாட்டையடி ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி திருத்தேர் விழா! மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: மழையிலும் அலைமோதிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு:  மழையிலும் அலைமோதிய பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

14 மார்
2016
10:03

சபரிமலை: சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. மாலை நேரத்தில் பெய்த மழையிலும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்தார். இந்த நேரத்தில் மழை பெய்தது. மழையில் நனைந்தபடி, ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். நடை திறந்து தீபம் ஏற்றிய பின் அனைவருக்கும் திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெறும் கொடியேற்றத்துக்கான சுத்திகிரியைகளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்தினார். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனம் மற்றும் அபிஷேகத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார். காலை, 9:30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு, கொடியேற்றத்துக்கான சடங்குகள் தொடங்கியது. 10:20 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. 11:00 முதல் 12:00 மணி வரை மீண்டும் நெய்யபிஷேகம் நடைபெறும். இன்று முதல், 22ம் தேதி ஒன்பதாம் நாள் வரை தினமும் இரவு, 9:00 மணிக்கு ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும், நாளை முதல் 22-ம் தேதி வரை தினமும் பகல், 12:00 மணிக்கு உற்சவபலியும் நடக்கிறது. 23-ம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. அன்று இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும், திருக்கொடி இறக்கப்பட்ட பின், 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். கோடை வெப்பம் கடுமையாக இருந்த நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் பெய்த மழை சுற்றுப்புறங்களை ஓரளவு குளிர செய்தது. இதனால் பக்தர்கள் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar