Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலில் கோடை வசந்த ... சமயபுரம் மாரியம்மன் கோவில் பச்சை பட்டினி விரதம் துவக்கம் சமயபுரம் மாரியம்மன் கோவில் பச்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவா - விஷ்ணு கோவிலில் மரகதலிங்கம் பிரதிஷ்டை?
எழுத்தின் அளவு:
சிவா - விஷ்ணு கோவிலில் மரகதலிங்கம் பிரதிஷ்டை?

பதிவு செய்த நாள்

14 மார்
2016
11:03

சென்னை: சுண்ணாம்பு கொளத்துார் சிவா - விஷ்ணு கோவில் கும்பாபிஷேகத்தின் போது, மூலவராக மரகத லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சென்னை, கோவிலம்பாக்கம் அடுத்த சுண்ணாம்பு கொளத்துாரில் அமைந்து உள்ளது மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில். திருக்குளம் வசதியுடன், 4.5 ஏக்கரில் அமைந்துள்ள கோவில், பல நுாறு ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல்,

கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்தது.இந்நிலையில், 2008ம் ஆண்டு, அப்பகுதியை சேர்ந்தவர்களால் அறக்கட்டளை நிறுவப்பட்டு, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 4.5 கோடி ரூபாய் செலவில் கோவில் புனரமைக்கப்பட்டு, வரும், 18ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அப்போது, மரகதலிங்க மூலவர் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து, மரகதாம்பிகை டிரஸ்ட் தலைவர் மணிமாறன் கூறியதாவது:இந்த கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முன்பு ஒரு காலத்தில் இக்கோவில் தேரோட்டத்தின்போது, புயல், மழை வந்ததால், வீதியில் விட்டு பக்தர்கள் ஒதுங்கினர். அப்போது, தேர் உருண்டு ஓடி குளத்தில் மூழ்கியது.அதன் பிறகு கோவிலுக்கு செல்ல தயங்கினர். இதனால், கோவில் சிதிலம் அடைந்து போனது. தகவல் மூதாதையார் வழி கேட்டது. இதை கேரள பணிக்கரிடம் பிரசன்னம் உறுதிப்படுத்தியது. சிதிலமடைந்த கோவில் கர்ப்பக்கிரஹத்தை சீர்படுத்த முயன்றபோது, அங்கு முக்கால் அடி உயரம் கொண்ட பச்சை நிற சிவலிங்கம், விஷ்ணு சிலை மட்டும் கிடைத்தது. இது மரகத லிங்கம் என்பது தெரியவந்தது. கோவிலை ஆகம விதிப்படி புனரமைத்து கொடுத்த செல்வநாத ஸ்தபதியும் உறுதி ப் படுத்தினார். வரும், 18ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தில் அந்த லிங்கத்தை மூலவராக பிரதிஷ்டை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மரகத லிங்கத்தின் மகிமை: புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக, சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர். மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம், சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும். மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யும் பால், மருத்துவ சக்தியை கொண்டது. இரவில் மரகதலிங்கத்தின் மேல் சாற்றி, காலையில் வழங்கப்படும் சந்தனமும் மருத்துவ சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. - நமது நிருபர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா ஆக., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்; ராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டுவிழாவில் மத நல்லிணக்கத்தை ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துாரில் முத்துமாரியம்மன் கோயில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar