பொங்கல் விழா: தங்க கவச அலங்காரத்தில் கருப்பராய சுவாமி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2016 11:04
திருப்பூர் : அனுப்பர்பாளையம் புதூர் சித்தி விநாயகர், கருப்பராய சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில், பொங்கல் விழா, 20ல் நோன்பு சாட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு கருப்பராய சுவாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை, 4:00 மணிக்கு, சுவாமி வீதி உலா நடந்தது. விழாவை முன்னிட்டு, தங்க கவச அலங்காரத்தில் கருப்பராய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.