கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2016 11:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. செஞ்சி தாலுகா, கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாய கர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 16ம் ஆண்டு, மகா உற்சவம் மற்றும் 7ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 3ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 6ம் தேதி அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 விளக்குகள் பூ ஜை நடந்தது. 8ம் தேதி இரவு 12 மணிக்கு விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சார் அம்மனுக்கு பூ பல்லக்கு நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு அம்மச்சார் அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினி தேவி மூர்த்தி ஆகி யோர் வடம் பிடித்தலை துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்தனர்.