திருநள்ளார் பிரமோற்சவம்: தங்க காக்கை வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2016 04:05
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பிரமோற்சவ விழாவில் தங்க காக்கை வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலா நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 5ம் தேதி முதல்6ம் தேதி வரை விநாயகர் உற்சவமும்,7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுப்ரமணியன் உற்சவம்,கடந்த 11ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு,கடந்த 12ம் தேதி செண்பகதியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 16ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 18 ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று இரவு 12மணிக்கு சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது.பின் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனிஸ்வர பகவான் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடந்தது. விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.