போடி: போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா திருப்புகழ் சபையின் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணன், பொருளாளர் அய்யப்பராஜ், தக்கார் சுமதி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துவிஜயன் வரவேற்றார். ஆன்மிக வாழ்வில் சிறந்து விளங்குவது ஆண்களா? பெண்களா ? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.