Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் ... வெள்ளிமலை முருகன் கோவில் பெருஞ்சாந்தி பெருவிழா நடந்தது வெள்ளிமலை முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம்
எழுத்தின் அளவு:
அன்னூர் பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
01:04

அன்னூர்: அன்னூர், பெருமாள் கோவிலில், ராமானுஜர் அவதார திருநாள் விழா இன்று நடந்தது.


ராமானுஜரின் அவதாரத் திருநாள், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உற்சவம் இன்று அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்தது. காலை 6:00 மணிக்கு, விஸ்வக்சேனா ஆராதனை, புண்யா வாசனம் நடந்தது.  ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தில்குமார் எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்னும் தலைப்பில் பேசுகையில்," ராமானுஜர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். வேதத்துக்கு இணையான ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தங்களை வாசித்து உணர வேண்டும். ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள் எனத் தெளிந்து அவன் மீது பக்தி செலுத்த வேண்டும். சரீரம் வேறு, ஆத்மா வேறு என்று கூறியவர் ராமானுஜர். நாராயணனின் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு துன்பம் என்பதே இல்லை. புலனடக்கம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். இந்திரியங்களுக்கு வசப்படக்கூடாது. அற்ப விஷயங்களில் ஆசை கொள்ளக் கூடாது, என ராமானுஜர் அறிவுறுத்தி உள்ளார்," என்றார். காலை 7:45 மணிக்கு மூலவர் ராமானுஜருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் ராமானுஜர் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar