பதிவு செய்த நாள்
13
ஜூன்
2016
12:06
ஊத்துக்கோட்டை: புதிதாக கட்டப்பட்ட அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஊத்துக்கோட்டை அடுத்த, மெய்யூர் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகை சமேத மெய்கண்டேஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்களிப்புடன் அய்யப்ப சுவாமி கோவில் கட்டப்பட்டு, கடந்த ஏப்., 24ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜை, கணபதி ஹோமம், மண்டல ஆராதனை, அய்யப்ப சுவாமிக்கு விசேஷ ஹோமம், ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கலச சம்ரோஷணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.