மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஹரித்ராநதி எனும் தீர்த்தக் குளத்தில் ஆனி பவுர்ணமியன்று தெப்பவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் கலந்திருப்பதாக ஐதிகம் கொண்ட இந்தக் குளத்தில் ஆனி பவுர்ணமியன்று நீராடினால் சகல நோய்களும் நீங்கி உடல்நலம் பெறலாம் என்பர்.