வால்பாறை: சுப்பிமணிய சுவாமி கோவிலில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இந்தக்கோவிலை சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. இதில், துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. இதன்படி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூ ஜையும், அலங்காரபூஜையும் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.