செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள வடவெட்டி அங்காளம்மன் ÷ காவிலில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்னர். மாலை அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.