பதிவு செய்த நாள்
18
ஜூலை
2016
12:07
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, பிரதோஷ பூஜையொட்டி, மூலவர் காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு, பால், தயிர், மஞ்சள், நெய், சந்தனம் உள்ளிட்ட அபி?ஷக பூஜைகள் நடந்தன. மாலை, 5 மணியளவில், காயநிர்மலேஸ்வரர், நந்தி பகவான், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில், ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன.
* ஏத்தாப்பூர், வசிஷ்டநதிக்கரையில் உள்ள, சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில், ஆடி மாத முதல் பிரதோஷத்தையொட்டி, நந்தி பெருமான் மற்றும் சாம்பமூர்த்தீஸ்வரருக்கு, சிறப்பு அபி?ஷக ஆராதனை நடந்தது.