ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து பெண்கள் பூ கூடைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அரசாளவந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.