பழநி : குருபெயர்ச்சியை முன்னிட்டு பழநி திருஆவினன்குடியில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்புஅபிஷேகம் மற்றும் வெள்ளிகவச அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதைப்போலவே பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார்கோயில் உள்ளிட்ட கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நவக்கிரக சன்னதியில் வியாழ பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, சுண்டல்மாலை படைத்து, தீபம்ஏற்றி பக்தர்கள் பரிகாரபூஜைகள் செய்தனர்.