சோழவந்தான், சோழவந்தான் பிரளயநாதர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு உலகநன்மைக்காக சுதர்ஷனஹோமம் நடந்தது. காலையில் சிவாச்சாரியார்கள் அம்மன், சுவாமிக்கு அபிஷேக, தீபாராதனைகளை செய்தனர். இரவு புனிதநீர் குடங்களை யாகசாலையில் வைத்து மழைவேண்டியும், உலகநன்மைக்காகவும் சுதர்ஷனஹோம பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழிலதிபர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், கோயில் நிர்வாக அதிகாரி லதா செய்திருந்தனர்.