Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் ... விழுப்புரம் லக்ஷ்மீ நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம் விழுப்புரம் லக்ஷ்மீ நாராயண வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆக., 22ல் மகா சம்ப்ரோக் ஷணம்
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆக., 22ல் மகா சம்ப்ரோக் ஷணம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2016
11:08

சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உள்ள, யோக நரசிம்மன் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு, 95 லட்சம் ரூபாயில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, வரும், 22ம் தேதி, மகா சம்ப்ரோக் ஷணம் நடைபெற உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவில், எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள யோக நரசிம்மன், வரதராஜ சுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னிதிகள், அவற்றின் விமானங்கள் மற்றும் பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம் ஆகியவற்றிற்கு, கடந்த ஜூலை மாதம், 10ம் தேதி, திருப்பணிகள் துவக்கின. திருப்பணிகள், கோவிலின் பழமை மாறாமல், தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, 95 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. இதில், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசட கோபம் கவசங்களுக்கு தங்க ரேக் பதிக்கும் பணி நடக்கிறது.

முதன் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணப்பந்தனமும், கஜேந்திர வரதராஜ சுவாமிக்கு ரஜத பந்தனமும் பொருத்தப்படவுள்ளது. பணிகள் முடியவுள்ளதை அடுத்து, மகா சம்ப்ரோக் ஷணம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, வரும் 18ம் தேதி, யாகசாலை பூஜை துவங்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. காவல் துறை, சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை ஆகியோருடன் இணைந்து, கோவில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இத்திருப்பணிகளை அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கமிஷனர் வீரசண்முகமணி உள்ளிடோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar