வேத நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2016 01:08
பெண்ணாடம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பெண்ணாடம் வேதவல்லி தாயார் சமேத வேத நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 7:00 மணியளவில் பெருமாள் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள் ஆகிய பொரு ட்களால் அபிஷேகம், காலை 8:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் அபிஷேகம், 7:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று (26ம் தேதி) இரவு 6:30 மணியளவில் கோவிலில் உரியடி உற்சவம் நடக்கிறது. அதேபோல் ஈச்சங்காடு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.